இத்திருக்கோயிலில் தினமும் 150 நபர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 5250/- செலுத்தினால் செலுத்துபவர் பெயரில் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதான உபயதாரர் விபரம் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்படும். ரூ. 1,05,000/- செலுத்தினால் அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு 150 நபர்களுக்கு வருடந்தோறும் ஒரு நாள் அன்னதானம் வழங்கப்படும்.